Friday, June 26, 2009

கொள்கை

குமரித்தொல் தமிழாய்ந்தோர்
கொள்கையைநான் ஆய்ந்தேன்காண்

குமரித்தொல் தமிழ்கொள்ளார்
கூற்றொடும்நான் கூர்ந்தேன்காண்

குமரித்தொல் தமிழ்க்கொள்கை
உண்மையெனக் கண்டேன்நான்

குமரித்தொல் தமிழ்க்கழுது
குருதியெலாம் கொதித்ததுகாண்

குமரித்தொல் தமிழ்கூறு
நல்லுலகம் புகுந்தேன்நான்

குமரித்தொல் தமிழ்ஞானக்
கோயிலாளைத் தொழுதேன்நான்

குமரித்தொல் தமிழ்க்குழைக்கும்
கொள்கையில்வேர் பிடித்தேதென்

குமரித்தொல் தமிழ்க்கேயென்
உயிர்வாழ்க்கை வைத்தேனே!

No comments: