Sunday, June 28, 2009

இதுதான் சிந்தனைத் திறவி

இதுதான் சிந்தனைத் திறவி

நெல்லிலிருந்துதான் நெல் வரும்; சொல்லிலிருந்துதான் சொல் வரும். நெல்லுக்கு நெல்தான் வித்து; அது விதைநெல். சொல்லுக்குச் சொல்தான் வித்து; அது விதைச்சொல், அதிலிருந்து வருவது வேர்ச்சொல்.

பிள்ளைக்கு மூலம் பெற்றோர்; சொல்லுக்கு மூலம் வேர்ச்சொல். ஒரே பெற்றோர்க்கு அவர்களின் உருவ்ச் சாயலில் புதுத் தோற்றங்களாகப் பல பிள்ளைகள் பிறப்பார்கள். அதே போல, ஒரே வேர்ச்சொல்லிலிருந்து; அதன் கருத்துச் சாயலில் - தொடர்பில் பல புதுச்சொற்கள் பிறக்கும்.

ஒரே பெற்றோர்க்குப் பிறந்த பல பிள்ளைகளின் முக அமைப்பில் ஓர் ஒற்றுமை தெரியும்; ஒரே வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த பல புதுச்சொற்களின் கருத்து அமைப்பிலும் ஓர் ஒற்றுமை தெரியும்.

- இர. திருச்செல்வம், சொல் அறிவியல் 1.

No comments: