Sunday, June 28, 2009

தமிழர்க்கு என ஒரு தனி மரபியல் உண்டு!

தமிழர்க்கு என
ஒரு தனி மரபியல் உண்டு!

தமிழ் என்று ஓர்:-
  • இனமரபு உண்டு
  • மொழிமரபு உண்டு
  • பண்பாட்டு மரபு உண்டு
  • கலை மரபு உண்டு
  • எழுத்து மரபு உண்டு
  • இலக்கிய மரபு உண்டு
  • இலக்கண மரபு உண்டு
  • சமய மரபு உண்டு
  • ஆன்மிக நெறி உண்டு
  • அறிவு மரபு உண்டு
  • அறிவியல் மரபு உண்டு
  • நாட்டின மரபு உண்டு
  • ஆண்டு (கால) மரபு உண்டு
  • ...
என்று எத்தனையோ அருமைமிகுந்த வாழ்வியல் நிலைகள் உள்ளன. அவற்றை அவ்வத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்தான் காக்கவேண்டும்; மீட்கவேண்டும்; புதுமைப்படுத்த வேண்டும். அயல் மொழியினங்களின் மேலாளுமைக்குத் தமிழ மாந்தர் ஆட்பட்டு; அடிமைப்பட்டக் காலங்களில் பல்வேறு திரிபுகளும் கோளாறுகளும் ஏற்பட்டுவிட்டன.

இதனை, நம்முள் பலரும் சரியாக உணர்ந்திருக்கவில்லை. இந்த வரலாற்று நிலைசார்ந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு; தமிழ்மக்களுக்குத் தங்கள் சொந்த இனமரபு, மொழிமரபு, வாழ்வியல் மரபுகள் மீது தப்பெண்ணமும் தாழ்வெண்ணமும் உருவாகும்படியாகச் செய்துவருகிர்றார்கள்.

No comments: