Thursday, June 11, 2009

ஆன்ம விளக்கம்

ஆன்மா என்பது என்றுமுள்ள நித்தியப் பொருள். ஆன்மாவுக்கு உடனாகவும் வேறாகவும் ஒன்றாகவும் இறை என்னும் அருட்பொருள் அதனோடு பிரியாது இயைந்து இருக்கிறது.

ஆன்மாவினிடத்து குறைநிலையும் அந்த அருட்பொருளினிடத்து குறைவில்லா நிறைநிலையும் விளங்கிநிற்கிறது. பதி-பசு-பாசம் அல்லது இறை-உயிர்-தளை என முப்பொருளாக முயங்கிக் கிடக்கும் அந்த முழுப்பொருளைப் பொருளுணர்ந்து முழுமைபெறுதல் என்பதே இறைமுறைத் திருப்பயணம். அது பிறவிப் பெருங்கடல் நீந்துதல் - இறவாப் பெருவாழ்வு பெறுதல் - நீடுவாழ்தல் - கூற்றுதைத்தல் - கூற்றம் குதித்தல் எனப்படுகிறது.

No comments: